வேத வசனத்தை படியுங்கள்
வேத வசனத்தை திருப்பி படியுங்கள்
வேத வசனத்தை பயிலுங்கள்
வேத வசனத்தை நேசியுங்கள்
வேத வசனத்தை எழுதுங்கள் மனதில் பதியும் ஏனெனில்
வேதாகமம் வசனம்
கிடைக்காத பஞ்சம் வருகிறது.
வேத வசனத்தை தியானியுங்கள்
வேத வசனத்தில் முன்னோர்களின்
வாழ்க்கையை படியுங்கள்
வேத வசனம் விசுவாசத்தை
கட்டியெழுப்பும்
வேத வசனம் சத்தியம்
ஆதலால் சத்தியம் விடுதலை தரும்
வேத வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும்
இருக்கிறது. (யோவான் 6 : 43)
வேத வசனம் ஜீவனுள்ளது ஆதலால்
சரித்திரத்தை படிக்க படிக்க கர்த்தர்
தரிசனம் தருவார்.
வேத வாக்கியங்கள் ஆவியானவரால்
அருளப்பட்டது
வேதவாக்கியங்கள் தேவனுடைய
மனுஷனை தேறினவனாக்கும்
எந்த நற்கிரியையுஞ் செய்யத்
தகுதியுள்ளவனாக்கும்
(2 தீமோத்தேயு 3:16)
வேத வாக்கியங்கள் உபதேசத்துக்கும்,
கடிந்துகொள்ளுதலுக்கும்
சீர்திருத்தலுக்கும், நீதியைப்
படிப்பிக்குதலுக்கும்
பிரயோஜனமுள்ளவைகளாய்
இருக்கிறது.
(2 தீமோத்தேயு 3:17)
வேத வசனத்தில் வாழ வேத
வசனங்களையே பேசுங்கள்
வேத வசனம் ஏழுமுறை புடமிடப்பட்டது,
அவ்வளவு வல்லமை வாய்ந்தது.
வேத வசனத்தை கர்த்தர் அனுப்பி
குணமாக்குவார்
வேத வசனம் வெளிச்சம் தரும்
வேத வசனத்தால் ஆவியானவர்
பேசுவார்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்,
ஆத்துமாவை
உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.
(சங்கீதம் 19:7)
வேதம் மனமகிழ்ச்சி தரும்
(சங்கீதம் 119:92)
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
(சங்கீதம் 5 :105)
சங்கீதம் 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
ஏசாயா 34 : 16
கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி இவைகளைச் சேர்க்கும்.
நெகேமியா 8:18
முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது;
வெளிப்படுத்தின விசேஷம் 22 : 7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.